அந்தக் கோவிலில் கவலை தோய்ந்த முகத்தோடு நின்றிருந்த சாவித்திரியைப் பார்த்து பட்டாபி ஐயர் மிகவும் அக்கறையோடு ஏன் அம்மா கவலையுடன் இருக்கிறாய் என்று விசாரித்தார். அதற்கு சாவித்திரி "ஐயரே ஆசையுடன் இரண்டு பேசும் பெண் கிளிகள் நிறையப் பணம் கொடுத்து வாங்கினேன். அவற்றிற்கு சரஸ் என்றும் லக்ஸ்மி என்றும் பெயரும் வைத்தேன். ஆனால் அவை இரண்டும் நாள் முழுவதும் பேசுவது "நாங்கள் விபசாரிகள்...உங்களைச் சந்தோசப்படுத்தவா???" என்ற வசனம் மட்டுமே. " என்று கவலையுடன் சொல்லி முடித்தாள்.
பட்டாபி ஐயர் "இதெல்லாம் பழக்க தோஷம் தான். என்னிடம் நரேஸ், சுரேஸ் என இரண்டு ஆண்கிளிகள் இருக்கின்றன. அவை காலையில் சுப்ரபாதம் பாடும். மதியம் திருவாசகம் பாடும். மாலையில் பஜகோவிந்தம் பாடும். மற்றும்படி தினமும் ஆயிரத்தெட்டுத் தடவை காயத்திரி மந்திரம் உச்சரிக்கும். உனது இரு பெண்கிளிகளையும் கொண்டு வந்து எனது வீட்டில் விடு. அவை ஒன்றாகப் பழகட்டும். எனது ஆண்கிளிகளின் நல்ல பழக்கத்தை உனது கிளிகளும் பழகிக்கொள்ளும். அவையும் தோத்திரங்கள் மந்திரங்களைச் சொல்லும்" என்றார்.
அதற்கு சாவித்திரி சரி ஐயரே ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்லுங்கள். கொண்டு வருகிறேன் என்றாள்.
பட்டாபி ஐயர் வருகின்ற புதன்கிழமை ஏகாதசி அன்றே கொண்டு வாடியம்மா என்றார்.
சாவித்திரி பட்டாபி ஐயர் சொன்னபடியே புதன் கிழமை குரு ஹோரையின் போது தனது கிளிகளை பட்டாபி ஐயர் வீட்டிற்கு கொண்டு போனாள். ஐயர் சாவித்திரியின் கிளிகளான சரஸையும் லக்ஸ்மியையும் தனது காயத்திரி மந்திரத்தை கண்மூடி உச்சாடனம் செய்து கொண்டிருந்த ஆண்கிளிகளான நரேஸ், சுரேஸ் இருக்கும் கூட்டைத் திறந்து உள்விட்டுக் கதவை மூடினார். உள்ளே சென்ற சரஸும் லக்ஸ்மியும் "நாங்கள் விபசாரிகள்...உங்களைச் சந்தோசப்படுத்தவா???" என்றன.
கண்ணைத் திறந்து பார்த்த நரேஸும் சுரேஸும் உடனே ஆகாயத்தை நோக்கி நாம் இவ்வளவு காலமும் பாடிய பாடல்களுக்கும் உச்சாடனம் செய்த காயத்திரி மந்திரமும் எதற்காகச் செய்தோமோ அதற்கான பலன் இன்று கைகூடியிருக்கிறது" என்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...

No comments:
Post a comment