இந்திய இரசிய விஞ்ஞானிகள் இணைந்து சிறிய பிரம்மோஸ்-எம் ஏவுகணைகளை உருவாக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்திய விமானம் தாங்கிக் கப்பலான விக்கிரமாதித்தியா தாங்கிச் செல்லும் மிக்-29 விமானங்களிலும் இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களிலும் இருந்து வீசக்கூடியதாக சிறிய பிரம்மோஸ் ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் வழமையான பிரம்மோஸ் ஏவுகணைகள் 3 தொன் எடையுள்ளவை. ஆனால் சிறிய ரக பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஒன்றரைத் தொன் எடையுள்ளவையாக இருக்கும். பலதரப்பட்ட தளங்களில் இவை பாவிக்கக் கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக torpedo tubes of submarines என்னும் சிறிய நீர்மூழ்கிக் கலன்களில் இவை பொருத்தப்படக் கூடியவையாக இருக்கும்.
பிரம்மோஸ்-எம் ஏவுகணைகள் ஆறு மீட்டர் நீளமும் அரை மீட்டர் விட்டமும் உடையவை. இவை ஒலியிலும் பார்க்க மூன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடியவை. அத்துடன் இரு நூறு முதல் முன்னூறு எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 290 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடியவை.
20130ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா நீருக்கடியில் 290 கிலோ மீட்டர் பாயக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பரிசோத்தித்தது.
இந்தியாவும் இரசியாவும் இணைந்து பத்து ஆண்டுகளுக்கும் முன்னர் முதலாவது பிரம்மோஸ் எனப் பெயரிட்ட்ட சீர்வேக ஏவுகணைகளை உருவாக்கின. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியினதும் இரசியாவின் மொஸ்கோ நதியினதும் பெயர்களின் பாதிகளை இணைத்து பிரம்மோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...

No comments:
Post a comment