அகமென்றும் புறமென்றும்
காதலும் வீரமும் தமிழர்
வாழ்வியலில் இரு கண்கள் அன்றோ
இந்திர விழா மன்மதன் விழா - எனக்
காதலுக்கு விழா எடுத்தவர் நாம் அன்றோ
அறம் பொருள் இன்பம் என
மூன்றில் ஒரு பகுதியைக்
காதலுக்குக் கொடுத்தவரும் தமிழர் அன்றோ
இரவுக்குறி பகற்குறி என
காதலர் சந்திப்புக்களுக்கு
கோட்பாடுகள் வகுத்தது தமிழ்ப்பண்பாடு அன்றோ
நகக்குறியென்றும் பற்குறியென்றும்
இணைந்த இன்பத்தை நினத்துப் பார்த்து மகிழ்ந்தவர்
எம் தமிழ்ப் பெண்கள் அன்றோ
ஏறு தழுவி மணம்முடித்தல்
கல் தூக்கி மணம்முடித்தல்
பரிசல் கொடுத்து மணம்முடித்தல்
மடலேறி மணம்முடித்தல்
போரில் வென்று மணம்முடித்தல்
என காதலரை இணைத்தவர் நாம் அன்றோ
ஒருவனுக்கு ஒருத்தி என ஒழுக்கத்தை வலியுறுத்தி
மனம் விரும்பியவரை தடையின்றி அடைய
திணைக்கலப்பு மணமும் செய்தவர் நாம் அன்றோ
எந்தையும் நிந்தையும் அந்நியரானாலும்
யாயும் ஞாயும் அறியாதவரானாலும்
மண்ணோடு நீர்போல் மனங்களைக்
காதலில் இணைய அனுமதித்தோர் தமிழர் அன்றோ
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமாக
வந்திருந்து மணம் பேசி
முன்னறியாதவரை இணைத்தல்
ஆரியம் தந்த அறிவீனமன்றோ
ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும்
உள்ளத்தால் இணைவதைக் காதலென்கின்றனபழம்பெரும் தமிழிலக்கியங்கள்
இன்று எம் எல்லோரினதும் ஒத்த நிலையா
அன்பை நாம் பொழிய வேண்டியதும்
எம் தேசியத்தில் அன்றோ
மழைதரு மேகங்கள் கருங்குழலாய்
கடலலைகள் மல்லிகை மாலைகளாய்
வண்ண வானவில்லே நெற்றியாய்
நீர் நிலைகளில் கதிரும் நிலவும்
தரும் விம்பங்கள் கண்களாய்
புள்ளினங்கள் ஆங்கே காதோரக் குழலாய்
உப்பளங்கள் வதனமாய்
முக்கனிகளும் இதழ்களாய்
நீரோடைகள்தான் கழுத்து நகையாய்
பசுமையான வயல்கள்
மரகத மணி பதித்த ஆடையதாய்
வன்னி விருந்தோம்பல் மார்பதாய்
தேன் மலர்களும் மீன்வளங்களும் கரங்களாய்
வழிபாட்டிடங்கள் வளையல்களாய்
வற்றாக் குளங்களும்இடைகளாய்
கரும்பு வளமும் கனிம வளமும் கால்களாய்
இயற்கைத் துறைமுகங்கள் பாதங்களாய்
பாடும்புள்ளினங்கள் மேகலையாய்
ஆடும் மயில்கள் மெட்டிகளாய் - அழகிய எம்
தேசமகள் ஆங்கே துணையின்றி வாடுகின்றாள்
காதலிப்போம் காதலிப்போம் அவளை
மனதாரக் காதலிப்போம்
அழகிய எம் தேசிய மகளை
அலங்கரித்த தன்னாட்சி
என்னும் அணிகலன்கள் - அன்று
படைக்கலன்கள் எல்லாம்
மௌனித்துப் போனதால்
கலைந்து போனதன்றோ
ஜெனிவாக் கிலுகிலுப்பையை நம்பியிராமல்
தனியாய் ஓர் அரசு என்னும் திருமண பந்தத்தில்
எம் தேசமகளை கைப்பிடிப்பது எம் கடன் அன்றோ
அமெரிக்கரும் பிரித்தானியரும் யாராகினரோ
இந்தியரும் சீனரும் எம்முறைக் கேளிர்
அவர்தம் ஆதரவும் எதிர்ப்பும்
எம் தேசமகளையும் தன்னாட்சியையும்
இணைக்கும் என நம்புதல் மடமையன்றோ
திங்கள் இல்லா மாலை கருங்குடையான்
பயங்கரவாதம் என அன்று ஓதி
எம் விடுதலையின் கால்வாரி
சிங்களம் தன்னைப் புணர்ந்தாலும்
அறிவாய் நன்றாய் ஆரிய நரித்தனம்
ஜெனிவா தன்னில் தீர்மானித்தாலும்
தீராது ஒழியாத் துயரென்பதாலும்
தேச மங்கை இடர் பெரும் தீயேன்பாய்
அறிந்தோம் என தோழா நீ முழங்கு
என்றும் மாறா அயோக்கியத்தனம்
இத்தாலி கொடுக்கோல் வெள்ளைச்சி
தேர்தலோடு தோற்று ஓடினாலும்
ஆரிய அயோக்கியத்தனம்
மாறாது தொடரும் வழக்கமென
அறிவாய் நீ என் தோழா
தமிழர்க்கு உதை மாறாத உதை
நிறுத்து அதை உன் கடன்
என உன் மனம் கொள்
ஈழவர் உதை இனித் தொடங்க
தேசமகளை நீ காதலி தோழா
அக நூலகத்தில் முகநூலாவாள்
இணைய முகவரி கொடுப்பாள்
இணைந்து முக வரி தொடுப்பாள்
மின்னஞ்சல் விடுத்து என்நெஞ்சில்
பொன்னூஞ்சல் ஆடிடுவாள்
ஆனாலும் அக்காதலிலும்
தேசிய மகளைக் காதலித்தல்
பெருங்கடன் என்றுணர்வாய் தோழா
சம்மதம் தெரிவிக்காமல் இழுத்தடிப்பதால்
ஆசை காட்டி ஏமாற்றிச் சாகடிப்பதால்
இறுதியில் பொய்யாய் முடிவதால்
சிலர் காதலும் ஜெனிவாத் தீர்மானம்போலே
தேசியத்தின் மீது வைக்கும் காதல்
என்றும் இனிக்கும் சரித்திரத்தில் நிலைக்கும்
என்றுணர்வாய் என் தோழா
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
No comments:
Post a Comment