உலகின் எந்தப் பகுதியிலும் இருக்கும் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தைச் சூறையாடக் கூடிய கணனிக் கிருமிகளை(வைரஸ்) இரசியாவில் உள்ள திருடர்கள் உருவாக்கியுள்ளனர். Neverquest Trojan என அழைக்கப்படும் இவை மிகவும் வலிமை மிக்க கணனிக் கிருமிகளாகும். வழமையான கணனிக் கிருமி எதிரிகளால்(Anti-virus) இவற்றைக் கையாள முடியாது என்றும் சொல்லப்படுகின்றது.
Neverquest Trojan ஏற்கனவே பல உலகின் பிரபல வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் உள்ள கணக்குகளில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது. திருட்டு வலைத்தலங்களில் உள்ள இணைப்புக்களை யாராவது சொடுக்கினால் அவர்களின் கணனிக்குள் Neverquest Trojan நுழைந்துவிடும். கணனியில் இருந்து வங்கி கணக்குகளுக்கு நுழையும் போது (log in) கொடுக்கப்படும் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் Neverquest Trojanபெற்றுக் கொண்டு தன்னை உருவாக்கிய திருடர்களுக்கு அனுப்பிவிடும். அவற்றைப் பாவித்து அவ் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை அவர்கள் தமது கணக்குகளுக்கு மாற்றிவிடுவார்கள். இது பற்றிய முழு விபரங்களை இந்த இணைப்பில் காணலம்: Neverquest Trojan
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...

No comments:
Post a comment