நாய் விடு தூது சோனியா காந்திக்கு
நாயே நாயே நாலுகால் நாயே
நெடுகம்பங் காணில் காலது
தூக்கி சிறுநீர்கழி நாயே
நீயும் நின் பெட்டையும்
கீழ்த்திசை சென்று
புது டில்லி நகரேகி
ஜன்பத் தெருவில்
பத்தாம் இலக்கம்
மோப்பம் பிடித்துச் சென்று
சோனியா காந்தி என்றொரு
தமிழின விரோதி கண்டு
விரைந்து வரும்
பொதுத் தேர்ந்தலில்
அவளது கட்சி
கடும் தோல்வியுற்று
ஊழ்வினையால்
ஊழல் வழக்கு பல கண்டு
பெற்ற பேமானி மகனுடன்
நாடுவிட்டோடுவீர் என்றுரைப்பீரே
நரிவிடு தூது - கருணாநிதி
நரியே நரியே
நெஞ்சகம் நிறை
வஞ்சக நரியே
நீயும் நின் காதலியும்
கோபாலபுரமோ
சிஐடி காலனியோ
நானறியேன்
உண்மையாய் நானறியேன்
விசாரித்தறிந்து
நின்னிலும் அதிக
வஞ்சனை நெஞ்டுடை
கருணாநிதியைப் பார்த்து
கறங்கு போல் கிளர்ந்தெழுந்த
மாணவர் எழுச்சியில்
அவர்தம் அரசியல் வாழ்வு
முடிகின்றதென்றுரைப்பீர்
பேய் விடுதூது - ராஜபக்சே
பேயே பேயே
நிலமதில் கால் படாப் பேயே
நீயும் நின் குழாமும்
கொழும்பு நகரேகி
அலரி மாளிகை தேடிப் பிடித்து
ஆங்கே வசிக்கும்
நின்னிலும் கேவலமாய் ஒருத்தன்
மஹிந்த ராஜபக்ச என்போனை
தேடிப் பிடித்து சேதி ஒன்று சொல்லாய்
அவனுக்கு ஆப்பு தயாரகின்றது
பன்னாட்டுச் சட்டத்தின் முன்
அவன் தண்டனை பெறும் நாள்
விரைவில் வருமென்றுரைப்பீர்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...

1 comment:
ஆஹா அருமையான கவிதைகள். சத்திமுத்தப்புலவர் வியந்திருப்பார்.
Post a comment