கண்ணில் தோன்றி
கன்னம் வழியோடி
நிலத்தில் வீழ்ந்து
மறைந்து போவதால்
காதலும் கண்ணீர் போலே
தீ எனத் தோன்றி
உதட்டில் உரசி
நெஞ்சில் புகைத்து
சாம்பலாய் போவதால்
காதலும் சிகரெட் போலே
அப்பா கேட்டார்
அப்படி என்னாடா
கண்டாய் அவளிடம்
யாரும் அறியார்
யாருக்கும் உன்னில் தெரியாதது
எனக்குத் தெரிந்தது என்பதை
வாரி வாரிக் கொடுத்தது
வற்றாது எஞ்சியிருக்கிறது
அன்பு
மழையடிக்குது குடை வேண்டாம்
குளிரடிக்குது போர்வை வேண்டாம்
தாகத்திற்கு தண்ணீரும் வேண்டாம்
அவள் என்னருகே
அவளில்லாவிடில்
ஒன்றுமே இல்லாத வெறுமை
அவளருகிருந்தால்
ஒன்றுமே தெரியாத நிலைமை
காதல்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
2 comments:
உருக வைக்குது வரிகள்...
பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
More Entertainment
www.ChiCha.in
Post a Comment