கடாரத்தில் களமாடிய தமிழர்
கலிங்கத்தில் களமாடிய தமிழர்
இமயத்தில் களமாடிய தமிழர்
என இன்றும் சொல்லலால்
பயனுண்டோ பெருமையுண்டோ
சிந்து நதிக்கரையில் இருந்து
புலம் பெயர்ந்தது யார்
வட வேங்கட மலை வரை
நிலமிழந்தது யார்
கதிரமலையில்
பலமிழந்தது யார்
காலி முகத்திடலில்
களமாடி காடையரால்
உதைபட்டது யார்
கச்சேரி முன்றனில்
களமாடி வதைபட்டது யார்
எம்மிளைஞர்கள் ஆடிய களம்போல்
அர்பணித்த தியாகம் போல்
கண்டதுண்டோ கேட்டதுண்டோ
வாலியைக் கொன்றது போல்
பின்னாலிருந்து கொன்றது யார்
எக்களமாடினாலும்
எத்தியாகம் செய்தாலும்
இந்தியா என்றொரு நாடு
பக்கத்தில் இருக்கும்வரை
விடிவில்லை எமக்கு
முடிவில்லை எம் துயரிற்கு
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...
-
F-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...

No comments:
Post a comment