நீதி அங்கு நிலை குலைந்தது
பௌத்தம் அங்கு பாடை ஏறியது
காந்தீயம் அங்கு காடைத்தனமானது
மானிடம் அங்கு மரித்துவிட்டது
கருவறைச் சிசுவும் கல்லறை கண்டது
அவலத்தின் உச்சத்தில்
பன்னூறாயிரம் அப்பாவிகள்
பரிதவித்து நின்றனர்
இறந்தவரைப் பார்த்து
வாழ்பவர் பொறாமை கொண்டனர்
முள்ளிவாய்க்கால்
சிங்களத்தின் மிருகத்தனத்தின்
வடிகாலானது
அரச பயங்கரவாதிகள் கையில்
கொத்தணிக் குண்டுகளும்
பொஸ்பரஸ் குண்டுகளும் கொடுத்த
பன்னாட்டுப் பயங்கரவாதிகள் யார்
விடையில்லை இன்றுவரை
நாட்டிற்கு நல்விருந்தாய் வாழ்ந்தவர்
சீறிவிழுந்த ஷெல்லிற்கு விருந்தாயினர்
ஐநாவின் பொய் நாவாய்
இந்தியத் துரோகி விஜய் நம்பியார்
தமிழர்தம் அவலம் பற்றி
அறிக்கை சமர்ப்பிக்க மறுத்து நின்றான்
பன்னாட்டுச் சமூகத்தின்
காக்கும் பொறுப்பு காற்றோடு போனது
முள்ளிவாய்க்காலில்
பன்னாட்டு நீதி
இரத்த ஆறாய் ஓடியது
வீழ்ந்தோமா தாழ்ந்தோமா
சரிந்தோமா சலித்தோமா
இறைப்பவன் இருக்கும்வரை
வாய்க்கால்கள் வற்றுவதில்லை
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
F-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...
-
இரண்டாயிரமாம் ஆண்டு முதல் நோர்வேயின் இலங்கைக்கான அமைதித் தூதுவர் எனவும் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான அமைதிப் பே...

No comments:
Post a comment