பெற்ற தாய் ஈழம் பரிதவிக்கையிலே
அற்ற குளத்துப் பறவைகளாய்
நாம் பறந்தோம் வெளி நாடுகள் நோக்கி
சொந்த நலம் காக்க
தாய் ஈழம் தவிக்கையில்
வெளி நாட்டுவாழ்க்கை
வேண்டாம் எனத் துறந்து
தாயகம் சென்ற செம்மல்
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
போராளிகளுக்கு அரசியல்
பாடம் கூறும் ஆசானாய்
தலைமைக்கு மதியுரைக்கும்
பேரறிவாளனாய் வாழ்ந்தவர்
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
இந்திய ஆக்கிரமிப்பிலே
காட்டிலும் மேட்டிலும்
வெளிநாட்டு மனைவியுடன்
நீரின்றி உணவின்றி
நித்திரையின்றி நிம்மதிதானின்றி
நோய் வாய்ப்பட்டவர்
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
அவர் அங்கள் பல பழுது பட
மருத்துவ வசதிதர இந்தியா மறுக்க
வேதனைகள் சுமந்து வெளிநாடுகள் சென்று
தமிழர்களுக்காய் குரல் கொடுத்தவர்
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
சரித்திரமும் படைத்து நின்றார்
சரித்திர நூலும் படைத்து நின்றார்
தமிழர் தரித்திரம் துடைக்க வந்த
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
தமிழீழத் தாய் துயர் துடைத்து
அவளுக்கு விடுதலை முடிசூடி
அவருக்கு நாம் அஞ்சலி செலுத்துவதே
அவர் ஆன்மாவைச் சாந்தியாக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
No comments:
Post a Comment