அம்மன் கோவில் தேர்த் திருவிழாவில்
கள்ளத்தனமாக கண்களின் சந்திப்பில்
அல்லாரிப்பாய் மலர்ந்தது
எம் இருவர் காதல்
நிலக்கீழ் தொடரூந்து நிலையத்தில்
உந்தன் உதட்டோரப் புன்னகையில்
திஸ்ரத்தில் தித்திக்கும் ஜதீஸ்வரமானது
எம் இருவர் காதல்
தேம்ஸ் நதிக் கரையில் வில்லோ மர நிழலில்
கை கோர்த்து காம்போதியில் பாட்டு நீயாக
பாவங்கள் நானாக சப்தமானது
எம் இருவர் காதல்
மின்னும் வர்ண விளக்கொளியில்
Piccaddily Circurs நடன சாலையில்
ராக மாலிகையில் வர்ணமாய் ஆடியது
எம் இருவர் காதல்
இந்தோளத்தில் அபிநயங்கள் பலவாக
ரூபகத்தில் உணர்வுகள் தாளம் போட
இணைந்தோம் என் தனியறையில்
இனிய பதமாக நல்ல சுகமாக
தினமும் பேசி கைப்பேசியும் சூடாகி
தித்திக்கும் உதட்டில் பல்லவித்து
அனுபல்லவித்து சரணம் நானென
தில்லான ஆடியது நம் காதல்
எல்லாம் நடந்தும் எதுவும் நடவாதது போல்
மணவறையில் அரங்கேறாமல்
சுருட்டி நீ மங்களம் பாடி
பிரிந்தது பெரும் கொடுமை
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
No comments:
Post a Comment