நீரின்றி சோறின்றி
நித்திரையின்றி நிம்மதியின்றி
மண் மீட்புக்கு உயிர் கொடுத்த
தியாகச் செம்மல்களேஉம்மைப் புதைக்கவில்லை
மீண்டும் வர விதைத்தோம்
என்று கதைத்தோம் கண்ணீர் விட்டோம்
இன்று உம் நினைவை உதைக்கின்றோம்
உங்கள் ஆன்மாக்களையும் வதைக்கின்றொம்
எதிரி உம் சின்னங்களைத்தான் சிதைத்தான்.
இன்று உம் தியாகத்தையே சிதைக்கின்றோம்
தண்ணீர் விட்டு வளர்க்காமல்
கண்ணீர் விட்டு தம் நாட்டுச்
சுதந்திரம் பெற்றவர்க்கு
உயிர் நீர் விட்ட
உம் தியாகம் புரியவில்லை
கையாட்கள் மூலம்
கைவரிசை காட்டுகின்றனர்
புலத்திலும் ஒரு முள்ளி வாய்க்காலுக்கு.
ஒன்று படுத்த எதுவும் செய்யாமல்
இன்று ஒன்றாகச் செய்யுங்கள்
ஓரிடத்தில் நன்றாகச் செய்யுங்கள்
என்று சொல்கிறோம் நாம் இங்கு
உங்கள் காதும் புளித்திருக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...
-
F-22, F-35 ஆகிய உலகின் மிகச் சிறந்த ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்கா மிக மிக இரகசியமாக தனது அடுத்த தலைமுறைப் ...

No comments:
Post a comment