தமிழநாட்டு உறவுகள் எம இரத்தப் பிணைப்புக்கள்
ஈழத்தோர் துயர்கண்டு துடிக்கின்றன துவள்கின்றன
சிதறும் சிறார்களைக் கண்டால் கல்லும் உருகும்
தமிழன் நெஞ்சு தவிக்கும் துடிதுடிக்கும்
உண்ணா விரதம் இருக்கின்றனர்
கொட்டும் மழையில் கைகோத்து நிற்கின்றனர்.
தீக்குளித்து இறந்தும் மடிகின்றனர்.
யாது பயன் இதனால்? என்னதான் நடக்கும்,?
உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளும்
சிங்களப் பேரினவாதிகளும் இணைந்து நிற்கின்றனர்.
தமிழ்த் தேசியத்தை அழிக்க! கருவறுக்க!
பார்பனசக்திகள் தூபம் போடுகின்றன
பொய்ப் பரப்புரை பல செய்கின்றன.
தமிழநாட்டு உறவுகள் தவித்து நிற்கின்றன
செய்வதறியாமல் திகைக்கின்றன.
இதனால் அடி சிங்களவனை என்று
ஒரு தடியைத் தன்னும் தூக்கிக்
கொடுக்க முடியுமா ஈழத்தவனுக்கு?
முடியாதே தேச விரோமானதே!
ஆரியப் பேய்கள் தடுத்திடுமே
சிறையில் தள்ளிடுமே!
சுயநிர்ணய உரிமை தேவை தமிழனுக்கு
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
“எரிபொருள் இன்றி கைவிடப்பட்ட போர்த்தாங்கிகள், உணவின்றி தவிக்கும் படையினர், சுட்டு வீழ்த்தப்பட்ட விநியோக விமானங்கள்” இப்படிப்பட்ட செய்திகள...
-
உலகத்தி லேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர்...
No comments:
Post a Comment