இருப்பது எங்கென்று தெரியவில்லை
போவது எங்கென்றும் புரியவில்லை
திசை கெட்டு நிற்கின்றோம்
வழிகாட்டியின்றித் தவிக்கின்றோம்
வழிகாட்டு எம் தேசக் குரலே
மீண்டும் வந்து வழிகாட்டு எம் தேசக் குரலே
கண்களில் கண்ணீரும் வற்றிவிட்டது
அழிவில்லா இடமென ஒன்றிங்கில்லை
துயரம்தவிர வேனொன்றிங்கில்லை
வந்து உன் நகைச்சுவை மொழியால்
எம் உள்ளங்களில் உரமூட்டிக்கொடு
தமிழன் வீரத்தை மீட்டுக்கொடு
புலம் நீங்கி நிலம் புகுந்து
களமாடிய வீரக் குரலே
நம்பிக்கை ஊட்டிவிடு
சிங்கக் கொடிக்குச் சிம்மவாஹினியைச்
சம்பந்தப்படுதுகின்றனர் சிலரிங்கே
இனக்கொலைப்படை எம்மண்ணில்
இருந்துவிட்டுப் போகட்டும் என்கின்றனர்
புது டில்லியையும் வாஷிங்டனையும்
திருப்திப்படுத்திச் சில்லறைகள் வாங்க
பிள்ளையில்லாவீட்டு கிழங்கள்
பெரிதாகத் துள்ளுகின்றன
வந்திங்கு வழிகாட்டு
மதியுயர் எம் சுடரே
வந்திங்கு வழிகாட்டு
செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும்
வித்தியாசம் தெரியாமல்
மருண்டு நிற்கின்றனர் - பலர்
பிரிந்து நிற்கின்றனர்
மதியுரைத்த எம் நேசக்குரலே
வந்திங்கு வழிகாட்டு
நல்ல நெறி புகட்டு
புலித்தோல்கள் போர்த்திங்கு
நரிகள் வந்து ஊளையிடுகின்றன
கழுதைகள் இங்கு கானம் பாடுகின்றன
காதுகள் அடைக்கின்றன
நல்லவரை இனம் காட்டு
தலைவனின் பாசக்குரலே
இருளது அகற்று அறிவெளியூட்டு
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...

No comments:
Post a comment