நேற்று உலகம் அழியவில்லை
நீயும் இறக்கவில்லை
நானும் இறக்கவில்லை
ஆனால் உலகம் அழிந்து கொண்டிருக்கிறது
நீயும் இறந்து கொண்டிருக்கிறாய்
நானும் இறந்து கொண்டிருக்கின்றேன்
எனக்கென்ன கவலை
உலகெங்கும் ஏற்ற இறங்கங்கள்
வளத்தில் வாய்ப்பில்
உழைப்பில் ஊதியத்தில்
பெரும் வேறுபாடுகள்
ஓடும் நீரை அதன் எண்ணப்படி
ஓடவிட்டால் ஒரு மட்டத்தில் முடியும்
அணைகளும் தடைகளும்
பல மட்டங்களை உருவாக்கும்
மூலதனங்கள் கட்டுப்பாடின்றி
உலகெங்கும் செல்ல வேண்டுமாம்
மூலப் பொருள்கள் கட்டுப்பாடின்றி
உலகெங்கும் செல்ல வேண்டுமாம்
உற்பத்திப் பொருள்களும் அப்படியே
உழைப்பாளிகளின் அசைவுகளுக்கு மட்டும்
கட்டுப்பாடு வேண்டுமாம்
வந்தேறு குடிகளை நாடுகடத்தும்
கொள்கையுள்ள கட்சியே
ஆட்சிக்குத் தெரிவு செய்யப்படும்
வேறுபாடுகளால் வேற்றுமைகளால்
உலகம் அழிந்து கொண்டிருக்கிறது
நீயும் இறந்து கொண்டிருக்கிறாய்
நானும் இறந்து கொண்டிருக்கின்றேன்
எனக்கென்ன கவலை
ஆட்சியில் பயங்கரவாதிகள்
விடுபட முயல்பவர் விரோதிகள்
கொல்லப்பட வேண்டியவர்கள்
நீதியும் நீதி கேட்டுத் தவிக்கிறது
கொலையாளிகள் தீர்ப்புக் கூறுகின்றனர்
கொள்ளையடித்தவர் கோவில் கட்டுகின்றனர்
பிள்ளை பிடித்தவர் போற்றப்படுகின்றனர்
உலகம் சீரழிந்து கொண்டிருக்கிறது
நீயும் இறந்து கொண்டிருக்கிறாய்
நானும் இறந்து கொண்டிருக்கின்றேன்
எனக்கென்ன கவலை
எல்லாருக்கும் போர்க்கலன்கள் வேண்டும்
ஒருவரை ஒருவர் வேரோடு அறுக்க வேண்டும்
அடங்காப்பசியுடன் அதிகார் வெறியர்கள்
அவன் நிலம் இவனுக்கு வேண்டும்
இவன் கடல் அவனுக்கு வேண்டும்
அவன் எல்லை இவனை நோக்கி நகர வேண்டுமாம்
இவன் அதிகாரம் அவனின் மேல் வேண்டுமாம்
ஆதிக்கப் போடியில் உலகம் அழிகிறது
நீயும் இறந்து கொண்டிருக்கிறாய்
நானும் இறந்து கொண்டிருக்கின்றேன்
எனக்கென்ன கவலை
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...


-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
-
ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...
-
ஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...

1 comment:
இறப்பு மட்டுமே சாஸ்வதம் என்று ஆகும் போது யாருக்குதான் என்ன கவலை இருக்க முடியும்? ஆனால்...
Post a comment